பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூலை, 2015

M.S.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part3

                         

                             
                         வட இந்தியாவில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்கும் வழக்கம் இருந்தது. அதைப்போல் தங்களுக்கும் வேண்டும் என பி.சுசீலாவும் குரல் எழுப்பினார். அது தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. அதனால் பி.சுசீலாவுக்கு மாற்றாக வேறு  பாடகிகளை வளர்த்து விட முடிவு செய்து, போலீஸ்காரன் மகள். சுமைதாங்கி ஆகிய படங்களில் முயற்சியும் செய்தார். ஆனால் அந்த படங்கள் தோல்வி அடைந்ததால்.  "காதலிக்க நேரமில்லை" படத்தில் இருந்து ஸ்ரீதர் பட வாய்ப்புகள் மீண்டும் பி.சுசீலாவையே  தேடி வந்தன. அப்படத்தின் இமாலய வெற்றியால் பின்னர் அவரின் பெரும்பாலான  படங்களில்  பி.சுசீலாவே பாடினார். அப்போது எல்லா பாடகர்களும் ஒன்றாய் குரல் கொடுத்திருந்தால் இப்போது ராயல்டி கேட்டு போராடும் நிலை வந்திருக்காது. ஸ்ரீதர் அவர்கள் பி.சுசீலாவின் குரல் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதற்கு இணையத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தது.  Sridhar said that there could never be another P.Susheela as for the Singing Voice.   ( Proof  -See the image  dowm)

                           இந்த தொகுப்பில் 1963, 1964 ஆம் ஆண்டு வந்த படங்களில் பாடல்களை பற்றி பார்ப்போம். ஐம்பதுகளில் வெளிவந்த புராண, இதிகாச படங்களின் தாக்கம் குறைந்து, அறுபதுகளின் துவக்கத்தில்  அதிகமான குடும்ப படங்கள் வெளிவந்து வெற்றி அடைய துவங்கி இருந்தன. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வு  முறையை  விளக்கும் பல திரைப்படங்கள் வெளிவந்தன.  படங்களின் எண்ணிக்கையும் கூட 40 முதல் 50 என்ற அளவில் உயர்ந்து இருந்தன.
                              1963-ல் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்த "ஆனந்த ஜோதி,  இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், மணி ஓசை, நெஞ்சம் மறப்பதில்லை,  பணத்தோட்டம், பெரிய இடத்து பெண், ரத்த திலகம்" போன்ற தமிழ் படங்களிலும், "Manchi Chedu". "vijaya nagarada veeraputruni katha" போன்ற தெலுங்கு படங்களிலும்  பி.சுசீலா அவர்கள் பாடினார்கள்.

                                    ஆனந்த ஜோதி படத்தில் "நினைக்க தெரிந்த மனமே". "காலமகள் கண்திறப்பாள் சின்னையா",. "பனி இல்லாத மார்கழியா", "பொய்யிலே பிறந்து" என எல்லாமே சிறப்பான பாடல்கள். பாடகர் பி.ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு மலையாள சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் இப்படி சொன்னார். "உலகத்திலேயே பெஸ்ட் சாங் " நினைக்க தெரிந்த மனமே" தான்;; அவ்வளவு தூரம் அவரை கவர்ந்த பாடல் அது.  எப்போது  மனம் கலங்கினாலும், நம்பிக்கை இழந்தாலும் "கால மகள் கண் திறப்பால் சின்னையா" பாடல் தான் பல பி.சுசீலா ரசிகர்களுக்கு டானிக். "நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்  நமக்கு இல்லையா".. என்ன ஒரு ஆறுதலான வரிகள்!!  இப்படம் அதே பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பாடல் விபரங்கள் என்னிடம் இல்லை.
                    பணத்தோட்டம் படத்தில்  "பேசுவது கிளியா", "ஜவ்வாது மேடையிட்டு",  "ஒரு நாள் இரவில் கண் உறக்கம்" போல எல்லாஎம் ஹிட் பாடல்கள்.  குடித்து விட்டு பாடுவது போல்  உன்னைக்கண் தேடுதே", "உருண்டோடும் நாளில்" போல சில பாடல்களை ஏற்கெனவே பி.சுசீலா பாடி இருந்தார். இப்படத்தில் டி.எம்.எஸ் அவர்களும், பி.சுசீலாவும் பாடிய "ஜவ்வாது மேடையிட்டு" பாடலை குடித்து விட்டு பாடுவது போல் அவ்வளவு ஒரிஜினலாக பாடி இருப்பார்கள்.   "இத்திரைப்படம் "Donga Notlu"  என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
               பெரிய இடத்துப்பெண் படத்தில் "அன்று வந்ததும் இதே நிலா", "கட்டோடு குழல் ஆட ஆட", "ரகஸ்யம் பரம ரகஸ்யம்", "துள்ளி ஓடும் கால்கள் எங்கே" எல்லாமே நல்ல பாடல்கள். "அன்று வந்ததும் இதே நிலா" பாடல் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்த பாடல். வெஸ்டர்ன் இசையை எல்லோரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்தனர் மெல்லிசை மன்னர்கள்.


     
     
         
    
                     

     
   
           




                                   கற்பகம் படம் கே.ஆர்.விஜயாவின் முதல் படம் ஆகும். இப்படத்தின் எல்லா பாடல்களையுமே கவிஞர் வாலி எழுதினார். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக பின்னணி பாடகர்கள் என்ற டைட்டிலில் பி.சுசீலாவின் பெயர் மட்டுமே இடம் பிடித்தது. ஐந்து பாடல்களும் பி.சுசீலாவின் தனிப்பாடல்களாக அமைந்தன.  நாயகிகளான சாவித்ரிக்கும், கே.ஆர்.விஜயாவுக்கும் பி.சுசீலாவே பின்னணி பாடினார். "மன்னவனே அழலாமா"., "ஆயிரம் இரவுகள் வருவதுண்டு", "பக்கத்து வீட்டு பருவ மச்சான்", "அத்தை மடி மெத்தையடி", "அன்னைமடி மெத்தையடி" என எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள்.  பக்கத்து  வீட்டு பருவமச்சான் பாடலில் பி.சுசீலாவின் குரலில் எக்ஸ்ப்ரஷனும்,  சாவித்திரி முகத்தில் காண்பிக்கும் எக்ஸ்ப்ரஷனும் மிக பிரமாதமாக இருக்கும். "ஆயிரம் இரவுகள் வருவதுண்டு" இன்னொரு அழகிய பாடல். பாடலில் வார்த்தைகளுக்கு இடையில் வரும்  இடைவெளியில் என்ன வார்த்தை வரும் என சொல்லாமல் ரசிகனையே சொல்ல வைத்த பெருமை கவிஞர் வாலியை சாரும்.  ( வந்ததம்மா மலர் கட்டில், இனி வீட்டினில் ஆடிடும் ......  என இடைவெளி விடும் போது "தொட்டில்" என ரசிகனே அதை நிறைவு செய்வான். ). கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்த "அத்தைமடி மெத்தையடி" பாடல் அருமையான தாலாட்டு பாடல். அதே பாடல் சாவித்ரி நடிப்பில்  "அன்னை மடி மெத்தையடி" எனவும் ஒலித்தது. இப்பாடலை கே.வி.எம் அவர்கள்  "தோடு நீடா" என்ற தெலுங்கு  படத்தில் ( "athavodi puvvuvale" ) உபயோகித்தார்.  ஆவி உருவில் கே.ஆர்.விஜயா பாடும் "மன்னவனே அழலாமா"  பாடல் பல தலைமுறைகளையும் கடந்து நிற்கிறது.
       ஆவி உருவில் வந்து பாடும் பாடல்கள் இவ்வருடத்தில் பிரபலம் ஆயின. ஒரு பக்கம் "மன்னவனே அழலாமா" ஹிட் என்றால் இன்னொரு பக்கம் "நெஞ்சம் மறப்பதில்லை" பாடலும்  அதைப்போலவே பிரபலமாகிற்று. நெஞ்சம் மறப்பதில்லை பாடலை இன்னொரு பாடகியை வைத்து பாட வைக்க வேண்டும் என ஸ்ரீதர் முயற்சித்தாராம்., கிட்டத்தட்ட 45 நாட்கள் நேரம் எடுத்து உருவாக்கிய ஒரு பாடல், அதன் தரம் குறையக்கூடாது என்பதற்காக போராடி பாடலை காப்பாற்றி  பி.சுசீலாவையே பாட வைத்து, அதை  காலத்தால். அழியாத பாடல் ஆக்கினார் எம்.எஸ்.வி.  இப்பாடலின் வெற்றிக்கு 75 % பி.சுசீலாவே  காரணம் என தன்னுடைய சுய சரிதையில் புகழாரம் சூட்டி இருக்கிறார்.  ( அந்த இன்னொரு பாடகி குரலில் இந்த பாட்டை கேப்பதை நினைச்சாலே... காது  குய்ங்...ங்குது)  நெஞ்சம் மறப்பதில்லை பாடல் இருமுறை படத்தில் ஒலிக்கும். ( Happy & Sad ) "முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி" என எல்.ஆர்.ஈஸ்வரியுடன் ஒரு பாடலும், "தேனடி மீனடி நீயடி நானடி" என டி.எம்.எஸ் அவர்களுடன் பாடிய  ஒரு வேகமான கிராமியப்பாடலும் குறிப்பிடத்தக்க பாடல்கள். இப்படம் "maarani manasulu" என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் நான்கு பாடல்களை பி.சுசீலா பாடினார்.
        இது சத்தியம் படத்தில் வரும் "சரவண பொய்கையில் நீராடி" பாடல் பல மேடைகளிலும் ஆரம்ப பாடலாக ஒலிக்கின்ற பாடல். பெரும்பாலான முருகன் கோயில்களில் தவறாமல் ஒலிக்கின்ற பாடல்.  ஆலாபனையும், இளமையான  குரலும், தெளிவான வார்த்தைகளும் இப்பாடலின் பலம் எனலாம்.  பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய "குங்கும பொட்டு குலுங்குதடி" பாடல் இன்னொரு சிறந்த பாடல். " காதலிலே பற்று வைத்தால் அன்னையடா அன்னை " என்ற  சோகப்பாடலும், "மனம் கனிவான் அந்த கன்னியை" பாடலும் மனம் கவர்பவை..  "ரத்த திலகம்" படத்தில் "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடல் ரொம்ப  வருடங்களாக கல்லூரி  நிறைவு நாளன்று எல்லோர் மனத்திலும் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது.
             இதயத்திலே நீ படத்தில் "உறவு என்றொரு சொல் இருந்தால்", "ஒடிவது போல் இடை இருக்கும்", "சித்திரப்பூவிழி வாசலிலே வந்து" போன்ற பாடல்கள் இனிமையானவை. "மணி ஓசை" படத்தில் "வருஷம் மாசம் தேதி பார்த்து", "பாயுது பாயுது கண்ணம்மா" பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. பாசம் படம் தெலுங்கில் "Manchi Chedu" என ரீமேக் செய்யப்பட்டது. "Repanti Roopam kanti" (பால் வண்ணம் பருவம் கண்டு) உட்பட ஐந்து பாடல்களை பாடினார் பி.சுசீலா. இது சத்தியம் படத்தில் புகழ் பெற்ற "சரவண பொய்கையில் நீராடி" பாடலின் இசையை இப்படத்தில்  "Poosina poove naa hrudayam".என ஒலிக்க செய்தார்  கே.வி.எம் அவர்கள்.


     
     
         
    
                     

     
   
           
 





          1964-ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், என் கடமை, காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், கலைக்கோயில், கர்ணன், கருப்பு பணம், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்கார  குடும்பம், புதிய பறவை, சர்வர் சுந்தரம் போன்ற தமிழ் படங்களிலும் Karna, Kavala Pillalu, Server sundaram போன்ற தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா பாடினார்.  இந்த லிஸ்ட்-ஐ பார்க்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. ஒரே இசை அமைப்பாளர் இசையில் ஒரே வருடத்தில் எத்தனை ஹிட் பாடல்கள்? ஒரு படம் கூட இசையில் சோடை போகவில்லை என்பதை விட, எல்லா படங்களின் பாடல்களுமே காலத்தை வென்ற பாடல்களாய் அமைந்தது வியப்பு.
                  பல புதுமையான முயற்சிகள் இவ்வருடத்தில் எடுக்கப்பட்டன. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட கர்ணன் படம் அக்காலத்திலேயே டெக்னிகலாக அசத்திய படம்.  அதன் பெரும்பாலான பாடல்களை ஹிந்துஸ்தானி இசையை தழுவி அமைத்தனர் மெல்லிசை மன்னர்கள். ஒரே இசை மழை என்றால் மிகை இல்லை. பி.சுசீலாவுக்கு மட்டுமே ஏழு பாடல்களை அள்ளி வழங்கினார்கள் மெல்லிசை மன்னர்கள். அவை எல்லாமே முத்துக்கள். "இரவும் நிலவும் மலரட்டுமே" பாடல் "சுத்த சாரங்கா" என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் இசை அமைக்கப்பட்டது. பி.சுசீலா ஹம்மிங்கில் பிரமாதப்படுத்தி இருப்பார். டி.எம்.எஸ்சும், பி.சுசீலாவும் பாடல் முழுவதையுமே அனுபவித்து பாடி இருப்பார்கள். தமிழ் சினிமா டூயட்ஸ்களில் ஒரு முக்கியமான இடம் இப்பாடலுக்கும் உண்டு. "அமீர் கல்யாணி" ராகத்தில் அமைந்த "என்னுயிர் தோழி" இன்னொரு மாஸ்டர் பீஸ்.. பி.சுசீலாவின் குரலும், பாடும் விதமும், ஹம்மிங்கும்  பாடலை தமிழ் பாடல்களில்   "கிளாஸிக்" என சொல்லக்கூடிய சில குறிப்பிட்ட பாடல்களின்  தரத்துக்கு இப்பாடலை உயர்த்தியது. . அரண்மனை அறிவான், அரியணை அறிவான் வரியை தொடர்ந்து வரும் ஆலாபனை... சான்சே இல்லை.. அபாரம் ..! அபாரம்!!   சுத்த தன்யாசி ராகத்தில அமைந்த "கண்கள் எங்கே" பாடல் இன்னொரு கிளாசிக். பி.சுசீலாவின் குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். "கண்ணுக்கு குலமேது" பாடலை பஹாடி ராகத்தில் அமைத்திருப்பார்கள். கர்ணனை தேற்றுவதற்காக அவர் மனைவி பாடவதை போல் அமைந்த பாடலில் வரிகளும் அதை பாடிய விதமும் மிக அற்புதம்.  டி.எம்.எஸ், பி.சுசீலா குரலில் ஒலித்த "மகாராஜன் உலகை ஆளலாம்" பாடல் கரகரப்ப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்டது.  வளைகாப்பு என்ற மங்கள நிகழ்ச்சிக்காக ஒரு பாடலை அமைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள். "மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி" என்ற பாடலில் இசைக்கோர்வை மிக அருமையாய் இருக்கும். பி.சுசீலாவின் குரலில் பாடல் கேட்க நிறைவாய் இருக்கும். இத தவிர "மலர்கள் சூட்டி" என துவங்கும் ஒரு பாடல் PBS-பி.சுசீலா குரலில் ஒலித்தது. படத்தில் இடம் பெறவில்லை. இத்திரைப்படம் கர்ணா என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.. "இரவும் நிலவும் மலரட்டுமே" பாடலை  "Neevu nenu valachithimi" என பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா அவர்கள். கண்ணுக்கு குலமேது (Gaaliki kulamedi) . கண்கள் எங்கே (Kannulandhe ) என தெலுங்கிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
                       அதைப்போலவே கலைக்கோயில் என ஒரு கிளாசிகல் படத்தை ஸ்ரீதர் டைரக்ஷனில். சொந்தமாக தயாரித்தார் எம்.எஸ்.வி அவர்கள். கையை சுட்டுக்கொண்டாலும் பாடல்கள் அபாரமாக அமைந்தன. ஆபோகி ராகத்தில் பாலமுரளி கிருஷ்ணாவுடன் பி.சுசீலா பாடிய "தங்க ரதம் வந்தது வீதியிலே" இப்போது கூட அடிக்கடி கேட்கும் பாடல். ஸ்ரீ ராகத்தில் அமைந்த "தேவியர் இருவர் முருகனுக்கு" பாடல் இன்னொரு கிளாசிக்.  மேடையில் அதிகமாக யாரும்  பாடிக்கேட்டதில்லை.. பாடலின் இடையில் வரும் ஆலாபனை  பாடுவதற்கு ரொம்ப சிரமமானது. பி.சுசீலா ரொம்ப அனாயாசமாய் பாடி இருப்பார்கள்.  பி.பி.எஸ் , பி.சுசீலா குரல்களில் ஒலித்த "நான் உன்னை சேர்ந்த செல்வம்" இன்னொரு குளிர்ச்சியான ஜோடிப்பாடல்.


     
     
         
    
                     

     
   
           





          இப்படி செமி-க்ளாசிகலில் கலக்கியவர்  வெஸ்டர்ன் இசையையும் விட்டு வைக்கவில்லை.. தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் காதலிக்க நேரமில்லை, புதிய பறவை போன்ற படங்களில் இசை அமைத்து இரு படங்களையும் வெற்றி படங்கள் ஆக்கினார். சோகப்படங்களையும், குடும்ப படங்களையும் பார்த்து ரசித்த ரசிகனுக்கு காதலிக்க நேரமில்லை என்ற இளமையும் நகைச்சுவையும்  ததும்பும்  படம் நல்ல மாறுதலாக இருந்தது. அதற்கேற்ற  வகையில் அருமையான இசையையும் அளித்தனர் மெல்லிசை மன்னர்கள்.. பட்டுப்போல் மெத்து மெத்தென ஒலிக்கும் "அனுபவம் புதுமை" பாடலில் ஸ்பேனிஷ் இசை சாயல் கொஞ்சம் தெரியும்.   ஜேசுதாஸ், பி.சுசீலா பாடிய "என்ன பார்வை உந்தன் பார்வை" சிம்பிளான ஆனால் அழகிய டூயட். பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும்  "நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா" என்ற பாடலின் ஆரம்பத்தில், பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும்  ஆலாபனை பாடலை எங்கோ கொண்டு சென்று விடும். பி.பி.எஸ், பி.சுசீலா, ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி என நால்வரும் ஒரே மைக்கில்  பாடிய  பாடல் அது.  "நாளாம் நாளாம் திருநாளாம்" பாடலைப்போல் மெல்லிசை மன்னர்களால்  கூட இன்னொரு பாடலை கம்போஸ் பண்ண முடியாது என பி.பி.எஸ் அடிக்கடி சொல்வார்.  அப்படி ஒரு நேர்தியான இசை அமைப்பு. பி.பி.எஸ்ஸும், பி.சுசீலாவும் அருமையாய் பாடி இருப்பார்கள்.
      புதிய பறவையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்.. பி.சுசீலாவுக்கும் மிகவும் பேர் பெற்று கொடுத்த பாடல்கள். இன்று வரை இதன் பாடல்களை பி.சுசீலா மேடையில் பாடுகிறார். பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை ஓன்று கேட்பேன், சிட்டுக்குருவி முதம் கொடுத்து என மூன்று பாடல்கள். "உன்னை ஓன்று கேட்பேன்" பாடல் பியானோவின் இசையுடன் பி,சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பிரமாதமான  பாடல். படத்தில் மூன்று முறை ஒலிப்பதாக ஞாபகம்.  ஒரு வெஸ்டர்ன் மேடைப்பாடகி பாடுவது போன்ற வகையில் உச்சஸ்தாயி இசையுடன் தொடங்கும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடல், பி.சுசீலாவுக்கே சவாலாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பாடலுக்கும் இரு வடிவங்கள் உண்டு. இரண்டுமே அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இத்திரைப்படம் "Singapore CID" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.  சிவாஜி நடிப்பில் வெளிவந்த "ஆண்டவன் கட்டளை", "பச்சை விளக்கு" போன்ற படங்களுக்கும் மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்தார்கள். ஆண்டவன் கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடம்", "  அழகே வா அருகே வா" பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ்.. "அமைதியான நதியினிலே" பாடல்  சோகப்பாடலாகவும் ஒலித்தது. "பச்சை விளக்கு" படத்தில் "அவள் மெல்ல சிரித்தாள்",  "குத்து விளக்கெரிய", "தூது செல்ல ஒரு தோழி  இல்லையென" என எல்லாமே இனிமையான பாடல்கள்.
         இவ்வருடத்தில் தான் "சர்வர் சுந்தரம்" படமும் வெளிவந்தது. மெல்லிசை மன்னர்கள் இசையுடன் பி.சுசீலாவின் துள்ளும் குரலும், கே.ஆர்.விஜயாவின் இளமையும் சேர்ந்து  "சிலை எடுத்தான் ஒரு சின்னபெண்ணுக்கு" பாடலை   ஒரு ஹிட் பாடலாக்கின. "தத்தை நெஞ்சம் சித்தத்திலே", "பாட்டொன்று தருவார் பாரடியம்மா", "போக போக தெரியும்" என எல்லாமே பிரபலமான பாடல்கள். இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கிலும் வெளி வந்தது. Kasi Kasile oke kannapilla (சிலை எடுத்தாள்), "pootha poche hridayam" (போக போக ) பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
             1964-ல் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம் ஆகிய நான்கு படங்களுக்கு மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்தார்கள்.
                     மீனவர்களின் வாழ்க்கை முறையை சொல்லும்.படமாக படகோட்டி படம்  அமைந்தது. "கரை  மேல் இருக்க வைத்தான்  எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்" என வாலியின் வரிகளில் மொத்த கதையே அடங்கி விடும். "என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி"  பாடலில் பி.சுசீலாவின் குரல் உணர்ச்சி பிழம்பாய் ஒலிக்கும். "நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி"  என பாடும் போது கலங்காத மனமும் கலங்கும். பி.சுசீலாவுக்கு பெருமை சேர்த்த பாடல்களில் இப்பாடலும் அடங்கும். காதலர்களின் பிரிவை உணர்த்தும் "பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்பாயோ" என்ற பாடல் டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்தது. இருவரும் பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள்.  இதற்கு மாறாக அழகு கொஞ்சும் பாடலாக "அழகு ஒரு ராகம்" அமைந்தது.  "தொட்டால் பூ மலரும்" பாடல் ஏ.ஆர்.ரஹ்மானால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரிஜினல் கேட்க கேட்க அலுக்காத பாடல். மெல்லிசை மன்னர்கள், வாலி, டி.எம்.எஸ், பி.சுசீலா, எம்.ஜி.ஆர், சரோஜாதேவி என எல்லோருடைய பங்கும் இப்பாடலில் மிக சிறப்பாக இருக்கும். இப்படம் "Kaalam Marindi" என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
               பணக்கார குடும்பம் படத்திலும் எல்லாம் ஹிட் பாடல்கள்.  "அத்தை மகள் ரத்தினத்தை", "பறக்கும் பந்து பறக்கும்", "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை", "வாடியம்மா வாடி" போல ஜாலியான பாடல்களும், "உன்னை நம்பினார் கெடுவதில்லை" என ஒரு சோகப்பாடலும் பிரபலம் ஆகின. இத்திரைப்படம் Srimanthalu என மொழி மாற்றம் செய்யப்பட்டது.
                தெய்வத்தாய் படத்தில் "இந்த புன்னகை என்ன விலை", "வண்ணக்கிளி சொன்ன மொழி எனன் மொழியோ", "காதலிக்காதே கவலைப்படாதே" போன்ற ஜோடிப்பாடல்களும் "பருவம் போன பாதையிலே" என ஒரு தனிப்பாடலும் பிரபலம் ஆகின.
              என் கடமை படத்தில் "யாரது யாரது தங்கமா", "தேனோடும் தண்ணீரின் மீது", "மீனே மீனே மீனம்மா",  "இரவினிலே என்ன நெனப்பு" என எல்லா பாடல்களுமே பேசப்பட்டன. இப்படம் Karanahanthakudu என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
                     கருப்புப்பணம் படத்தில் "கண்மணி கண்மணி கனியே சிறுமணி" பாடல் ஓரளவு பிரபலமான பாடல். பார் மகளே பார் படம் "Kavala pillalu" என்ற பெயரில் இவ்வருடம் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
                 


     
     
         
    
                     

     
   
           











YearLangMovieSongs
1963Tamilaanandha jyothikaalamagal kannthirappaaL 
1963Tamilaanandha jyothininaikka therintha maname
1963Tamilaanandha jyothipani illatha maargazhiya
1963Tamilaanandha jyothipoyyile piranthu poyyile
1963Tamilidhayathil neeodivathu pol idai irukkum
1963Tamilidhayathil neeChithira poovizhi vasalile
1963Tamilidhayathil neepazhagi vantha (uravu entoru)
1963Tamilidhu saththiyamkadhalile patru vaidhal
1963Tamilidhu saththiyammanam kanivaana andha 
1963Tamilidhu saththiyamsaravana poigayil nEraadi
1963Tamilidhu saththiyamkunguma pottu kulunguthadi
1963Tamilkarpagamannai madi methayaadi (Sad)
1963Tamilkarpagamathai madi methaydi
1963TamilkarpagammannavanE azhalaamaa
1963Tamilkarpagamaayiram iravugal varuvathundu
1963Tamilkarpagampakkathu vEtu paruva machaan
1963Tamilkarpagamaayriam iravugal -unheared version
1963Telugumanchi cheduRepanti roopam kanti
1963Telugumanchi chedudora dora vayasu
1963Telugumanchi chedupoochina poove
1963Telugumanchi chedutherela gudiyela
1963Telugumanchi cheduthodu needa
1963Tamilmani osaipaayudhu paaudhu kannamma






1963Tamilnenjam marappathillaimunthaanai panthaada 
1963Tamilnenjam marappathillainanjam maRappadhillai
1963Tamilnenjam marappathillainenjam marappadhillai -ver2
1963Tamilnenjam marappathillaithEnadi mEnadi maanadi nEyadi
1963Tamilpanathottamjavvathu medayittu
1963Tamilpanathottamoru naal iravil kannurakkam
1963Tamilpanathottampesuvathu kiliya illai
1963Tamilperiya idathup pennAntru vanthathum ithe nila
1963Tamilperiya idathup pennantru vanthathum (sad)
1963Tamilperiya idathup pennkattOdu kuzhalaada
1963Tamilperiya idathup pennragasiyam parama ragasiyam
1963Tamilperiya idathup pennthulli odum kaalgalenge
1963Tamilratha thilagammullirukkum
1963Tamilratha thilagampasumai niRaindha 
1963Teluguvijaya nagarada veeraputmadhura mohana veena
1964Tamilaandavan kattalaiAmaidhiyana nadhiyinile odam
1964Tamilaandavan kattalaiAzhage vA Aruge vA
1964Tamilaandavan kattalaiThennai ilam keetrinile
1964Tamildeiva thaaiIntha punnagai Enna vilai
1964Tamildeiva thaaikaadhalikkathe kavalaipadathe
1964Tamildeiva thaaiParuvam pona padhayile
1964Tamildeiva thaaiVannkili sonna mozhi enna
1964Tamilen kadamaiiravinile enna nenappu
1964Tamilen kadamaimeene meene meenamma
1964Tamilen kadamaithEnodum thannErin mEdhu
1964Tamilen kadamaiYaarathu Yaarathu thangama
1964Tamilkaadhalikka neramillaienna paarvai undan paarvai
1964Tamilkaadhalikka neramillainaaLaam naaLaam thirunaaLaam
1964Tamilkaadhalikka neramillainenjathai alli konjam thaa thaa
1964Tamilkaadhalikka neramillaiAnubhavam pudhumai
1964Tamilkaikodutha deivamkulunga kulunga sirikkum
1964Tamilkalai koyilDeviyar iruvar muruganukku
1964Tamilkalai koyilnaan unnai serndha selavm
1964Tamilkalai koyilthangaratham vandhadhu
1964Telugukarnabangaru momu
1964Telugukarnaevvari korake
1964Telugukarnagaaliki kulamedhi
1964TelugukarnaKannulanthe kannapadi
1964TelugukarnaNeevu nenu kalisithimi
1964Telugukarnapadathi galamuna
1964TamilkarnanKangal Enge nenjamum ange
1964TamilkarnanKannukku kulamedhu
1964TamilkarnanMaharajan Ulagai aalalaam
1964TamilkarnanIravum Nilavum malarattume
1964TamilkarnanEnnuyir Thozhi keloru sedhi
1964TamilkarnanManjal mugam niram mari
1964Tamilkaruppuppanamkanmani kanmai kaniye sirumani[1]
1964TeluguKavala PillaluMadhuraa nagaraana vasantham 
1964TeluguKavala PillaluNaa Janakuni mano vidhi 
1964TeluguKavala Pillalunaa karu patalani
1964TeluguKavala Pillalunenu
1964TeluguKavala Pillalunidura pothe
1964Tamilpachai vilakkuaval Mella Sirithal
1964Tamilpachai vilakkuKuthu Vilakkeriya 
1964Tamilpachai vilakkuthoodhu sella oru thozhi
1964Tamilpadagottiazhagu oru raagam
1964TamilpadagottiEnnai eduthu thannai 
1964Tamilpadagottipaatukku paateduthu
1964TamilpadagottiThottal Poo malarum
1964Tamilpanakkara kudumbamAthai magal rathinathai
1964Tamilpanakkara kudumbamidhuvari nEngal paartha
1964Tamilpanakkara kudumbamparakkum panthu parakkum
1964Tamilpanakkara kudumbamunnai nambinor 
1964Tamilpanakkara kudumbamvaadiyamma vaadi 
1964Tamilpudhiya paravaichittu kuruvi mutham 
1964Tamilpudhiya paravaipaaratha njabagam (sad)
1964Tamilpudhiya paravaiPaartha njabagam illayo
1964Tamilpudhiya paravaiUnnai ontru ketpen
1964Tamilsarvar sundarampaattontru tharuvaar 
1964Tamilsarvar sundarampOga pOga theriyum
1964Tamilsarvar sundaramsilayeduthaal oru 
1964Tamilsarvar sundaramthathai nenjam sithathile`
1964Teluguserver sundarampootha poche hridayam
1964Teluguserver sundaramkasi kasile oke
1964Teluguserver sundarammohini ilapye velisene
1964Teluguserver sundaramkanne dendham


(thodarum )


(Part-1) (Part-2)........ (Part-4) (Part 5)

 

4 கருத்துகள்:

  1. Melody Doyenne – P Susheela

    The early 1950s introduced to the South Indian Musical world a voice destined to rule music world for times to come. A calm and composed prodigy named Pulapaka Susheela recorded her first song ‘ Yethuku Azhathai’ (meaning - why u invited me ) for the tamil movie Petra thai. Not many then understood that years from then she would be crowned ‘ Isaiarasi – Queen of Music’. The beginning was a tough and arduous - it was said a popular music director felt the voice was too soft as singers in that period had base voices.The AVM production house appointed a tamizh pandit to teach the intricacies and nuances of the language. ‘Missiamma’ songs (1955) popularized PS voice in Tamil and Telugu. In 1957, ‘Azhaikaathey Ninaikathey’ song pushed her to top rung of music in Tamizh. From then on it was history in the making…
    PS voice defined the voice of feminism in the 50s 60s and 70s; the choice of every household listener. Almost every heroine of the south, be it Anjali Devi, Padmini, Ragini, Saroja devi, Savitri,Devika, KR Vijaya,Jayalaalitha, Sarada ,Jamuna, Sowcar Janaki, Sheela, Jayanthi ,Kanchana,EV.Saroja,L.Vijayalkshmi, Rajasulochana, Manjula, Latha, Lakshmi, Jayachitra .. Etc, treasure the voice of the genius in almost all their movies. Her voice modulation imbibed the characteristics of every actress she sung and gifted her voice to them with individuality. The 60’s can simply be termed the Golden era of Tamizh music. There was not a movie recorded without PS honey soaked voice. Her voice kept reverberating across the various radiostations across the globe 24 /7.
    It is impossible for anyone to simply say that these are my top ten favorite songs of PS. Probably, we can say top 1000 favorite songs… but for an ardent music listener every song of PS is a delight. Be it a sad melancholy like ninaika therindha manamey, sonnadhu neethana, unnai kaanatha kannum….. or a classical like Mannavan vanthanadi….or a duet like poomailaiyil orr malligai, aayiram nilvay vaa , a western number like enna enna varthaigalo… The PS stamp for each song is unique and inimitable...Till date there has been no voice that has surpassed the glorious voice of PS. (To be contd PS & Tamizh...)

    பதிலளிநீக்கு